வீடுகளில் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

கரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 8.5 பவுன் நகைகளைத் திருடியவரை போலீஸார்  கைது செய்தனர்.

கரூரில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 8.5 பவுன் நகைகளைத் திருடியவரை போலீஸார்  கைது செய்தனர்.
கடந்த மாதம் 7-ம் தேதி கரூர் ஆண்டாங்கோவில் சுப்பையா பிள்ளை லேஅவுட்டைச் சேர்ந்த குணசேகரன் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடிச் சென்றனர்.  அதுபோல கடந்த மாதம் 17-ம் தேதி ஆண்டாங்கோவிலைச் சேர்ந்த கனகராஜ்  வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையையும், 23-ம் தேதி கரூர் புதுத்தெருவைச் சேர்ந்த பாலாஜி (38) வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகையையும் திருடிச் சென்றனர். 
இதுதொடர்பான புகார்களின் பேரில் கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வீடுகளில் திருடியதாக திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபுவை (35) செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து, அவரிடமிருந்து 8.5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com