தேசிய ஏரோபிக்ஸ் போட்டியில் பரணி வித்யாலயா மாணவிகள்: தமிழகம் சார்பில் பங்கேற்கின்றனர்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேசியளவிலான ஏரோபிக்ஸ் போட்டிகள் தில்லி அருகிலுள்ள

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான தேசியளவிலான ஏரோபிக்ஸ் போட்டிகள் தில்லி அருகிலுள்ள குர்கானில் வரும் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 
இப்போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க கரூர் பரணி வித்யாலயாவைச் சேர்ந்த ஹேமந்த், தர்ஷனா, தீக்சிதா, அஷ்மிதா, ஜஷ்மிதா, செல்சியா கேத்தரின், சமிதா, சஷ்டிகா, தேஜஸ்வினி, ராஜேஸ்வரி, நிஷிதா, கீர்த்தனா, பிரியதர்ஷினி, தனுஸ்ரீ ஆகிய 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
போட்டியில் பங்கேற்க சனிக்கிழமை புதுதில்லி  புறப்படும் மாணவிகளுக்கான வழியனுப்பு விழாவில் பரணி பார்க் கல்விக் குழுமத் தாளாளர் எஸ். மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், பாதுகாப்பு அமைச்சக தேசிய ஆலோசனை க்குழு உறுப்பினரும், பரணி பார்க் கல்விக் குழும முதன்மை 
முதல்வருமான முனைவர் சொ. ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் ந. சுதாதேவி ஆகியோர் பங்கேற்று, விளையாட்டு வீரர்கள்   மற்றும் பயிற்சியாளர்கள் துரை, சிவகாமி ஆகியோரை பாராட்டி வாழ்த்தி வழியனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com