கரூர்
இளைஞருக்கு கத்திக்குத்து: ரயில்வே ஊழியர் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப் பதிவு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன் (35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பொது இடத்தில் நின்று தகா
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன் (35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பொது இடத்தில் நின்று தகாத வார்த்தை பேசிய அதே பகுதியைச் சேர்ந்த ரகு, ராகுல் ஆகியோரை தட்டிக் கேட்டாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அங்குள்ள பகவதியம்மன் கோயில் அருகே மகேந்திரன் நின்றபோது அங்கு வந்த ரகு உறவினர்கள் ராஜேஷ்கண்ணன்(34), ஈரோடு ரயில் நிலைய ஊழியர் ரகுபதி (31) ஆகியோர் தகராறு செய்து மகேந்திரனை கத்தியால் குத்தினராம். இதில் படுகாயம் அடைந்த மகேந்திரன் கரூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து ராஜேஷ்கண்ணன், ரகுபதி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.