அரவக்குறிச்சி அருகே வேன் மோதி  விவசாயி சாவு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேன் மோதி விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே வேன் மோதி விவசாயி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் ரகுபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி அப்பாவு (58). இவர் செவ்வாய்க்கிழமை இரவு கரூர்- திண்டுக்கல் சாலையில் மணல்மேடு பகுதியிலுள்ள தேநீரகம் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் அப்பாவு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து, கரூர் எஸ். வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் புஷ்பராஜை (43) கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com