கரூர் மாவட்த்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், வாங்கப்பாளையம் கொங்கு நகரைச் சேர்ந்த வீராசாமி மகன் சங்கர் என்கிற ஆட்டோ சங்கர்(37). இவர்
திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் த. அன்பழகனுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையின்பேரில் சங்கரை குண்டர் தடுப்புக் காவலின் கீழ் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, புதன்கிழமை சங்கர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.