மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் பல்வேறு கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தனர்.
கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெரூர் தென்பாகம் ஊராட்சியைச் சேர்ந்த எம்ஜிஆர் நகர், பெறமாயி அம்மன்கோயில் தெரு, ஆர்சி தெரு பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
இதுதொடர்பாக பலமுறை ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் தெரிவித்தும் நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு விரைவில் அடிப்படை வசதி கிடைக்கவில்லையென்றால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்து விடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
கரூர் ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்குட்பட்ட அம்மன் நகர், ஜேகே நகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதிக்கு சாலை வசதியும், போதிய குடிநீர் வசதியும் செய்துதரக்கோரியுள்ளனர்.