மாயனூரில் அரசு பள்ளித் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து கணினியைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் மாயனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரத்தினம்(53) வழக்கம்போல கடந்த 14 ஆம் தேதி பள்ளி முடிந்தவுடன் தனது அறையை பூட்டிவிட்டுச் சென்றார்.
திங்கள்கிழமை பள்ளிக்கு வந்துபார்த்தபோது, தனது அறையின்பூட்டை உடைத்து உள்ளே இருந்த கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது .
இதுகுறித்த புகாரின்பேரில் மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.