க.பரமத்தி அருகே பெண் ஊராட்சி எழுத்தரிடம் 5 பவுன் தங்கச் செயின் புதன்கிழமை பறிக்கப்பட்டது.
கரூர் மாவட்டம், விஸ்வநாதபுரியைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி கலாதேவி(45). இவர் புதன்கிழமை க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.
கரூர்-கோவைச் சாலையில் புதுக்கநல்லி என்ற இடத்தில் சென்றபோது பின்னால் இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இருவர், கலாதேவி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் க.பரமத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.