பெண்ணிடம்  செயின் பறிப்பு

மொபட்டில் சென்ற பெண்ணைக் கீழே தள்ளி ஏழரை பவுன் தங்கச் செயின் பறிக்கப்பட்டது.

மொபட்டில் சென்ற பெண்ணைக் கீழே தள்ளி ஏழரை பவுன் தங்கச் செயின் பறிக்கப்பட்டது.
கரூர் அடுத்த ஏமூர் புள்ளனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி பிரேமலதா(35). இவர் புதன்கிழமை பிற்பகலில் மொபட்டில் ஏமூரில் உள்ள தோட்டத்திற்குச் சென்றார். ஏமூர் பிரிவில் சென்றபோது பின்னால் பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், பிரேமலதா ஓட்டிச் சென்ற மொபட்டை வழிமறித்து அவரை கீழே தள்ளி கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.  
இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com