மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனை  பிரசாரக் கூட்டம்

க.பரமத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனை பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

க.பரமத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனை பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் க.பரமத்தி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.வி.பழனிசாமி தலைமை வகித்தார். 
மூத்த தலைவர் து.ரா.பெரியதம்பி, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் ராஜா முகமது, கிளை நிர்வாகிகள் சுந்தரம், சரவணன், ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com