கரூரில் விபத்தில் இறந்த மயிலை வனத்துறையினர் மீட்டு அதனை அடக்கம் செய்தனர்.
கரூரில் திண்டுக்கல் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பகுதியையொட்டியுள்ள வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் உள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள காளியப்பனூர் அருகே சாலையை கடக்க முயன்ற சுமார் 5 வயது மதிக்கத்தக்கூடிய பெண் மயில் சுவரில் மோதி இறந்தது.
தகவலறிந்த மாவட்ட வனத்துறை அலுவலர் அன்பு உத்தரவின்பேரில், வனவர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்து கிடந்த மயிலை மீட்டு கால்நடை மருத்துவர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்து சம்பவ இடத்திலேயே புதைத்தனர்.