கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் புதிய வட்டாரத் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டாரங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து, புதிய வட்டாரத் தலைவர்களை நியமித்து மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடவூர் தெற்கு ஒன்றியத்திற்கு மாணிக்கம், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்திற்கு கார்த்திகேயன், க.பரமத்தி தெற்கு ஒன்றியத்திற்கு சக்திவேல், கரூர் மேற்கு சண்முகம், தாந்தோணி மேற்கு தனபாலன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு த.சரவணன், தோகைமலை தமிழ்செல்வன் ஆகியோர் புதிய வட்டாரத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.