கரூர் அருகே தீயில் கருகி வெல்டிங் தொழிலாளி தீயில் கருகி இறந்தார்.
சேலம் ஐந்துரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(55). வெல்டிங் தொழிலாளி. இவர், கரூர் செம்மடை ரவுண்டானா பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு இரும்பு ஏணிப்படி அமைப்பது தொடர்பாக வேலை பார்த்து வந்தார்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பணியின்போது, அவர் தவறுதலாக அருகில் கிடந்த காகித அட்டைகள் நிறைந்திருந்த இடத்தில் வெல்டிங் கம்பியை நீட்டியதில், அட்டையில் பிடித்த தீ மளமளவென பரவி அவர் மீதும் பற்றியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின்பேரில் வாங்கல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.