கரூரில் செவ்வாய்க்கிழமை அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்டச் செயலாளரும், போக்குவரத்துதுறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் விடுத்துள்ள அறிக்கை:
ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு உதவிய அப்போதைய திமுக, காங்கிரஸ் கூட்டணியைக் கண்டித்து, அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் கரூர் 80 அடி சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற உள்ளது. மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் வரவேற்கிறார். கூட்டத்தில் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம்.கீதா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.