கரூரில் மகிளா காங்கிரஸ் கொடி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவி சாரதா தேவி மற்றும் மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி ஆகியோர் பங்கேற்று மகிளா காங்கிரஸ் கொடியை அறிமுகப்படுத்தி பேசினர்.
கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்திக்கு மகிளா காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகள் தெரிவிப்பது, சக்தி செயலியை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தி அதில் அதிகளவிலான உறுப்பினர்களைச் சேர்ப்பது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றத்தை தடுப்பதற்கு புதியதாக ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும், குளித்தலையில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டார நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.