தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் தேசிய அறிவியல் குழந்தைகள் மாவட்ட மாநாடு அக்டோபர் மாதம் கரூரில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாநாட்டில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் கரூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாட்சா தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் எஸ்.டி. பாலகிருஷ்ணன், மு.தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், மாவட்ட துணைத் தலைவர் காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகிகள் ஆரோக்கிய பிரேம்குமார், சண்முகவடிவு, தனபால், திலகவதி ஆகியோர் ஆசிரியர்களுக்கு ஆய்வு குறித்து செய்முறை பயிற்சி அளித்தனர். கூட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.