நடைபெற உள்ள அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு கள் இயக்கம் போட்டியிட உள்ளதாக, இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி தெரிவித்தார்.
கரூரில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது:நாட்டையும், நாடு பட்டிருக்கும் கடனையும் கண்டு கொள்ளாமல் பயணிக்கும் கட்சிகள் இருப்பது நாட்டுக்குப் பேராபத்து.
நாட்டைப் பற்றி சிறிதும் அக்கறையின்றி ஆட்சியை மட்டுமே பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் உள்ளன.
14 கொள்கைகளை முன்வைத்து தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி.
மற்ற இரு தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து முடிவு பின்னர் அறிவிப்போம் என்றார் அவர்.