கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்த வீரராக்கியத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் தாயார் காளியம்மாள் (65). இவர் அதே பகுதியில் புதன்கிழமை மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது அவ்வழியே பைக்கில் வந்த இரு இளைஞர்கள் காளியம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். புகாரின்பேரில் மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.