கரூர்

காரில் ஆடுகளை கடத்த முயன்ற இருவர் கைது

DIN

காரில் ஆடுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த அத்திக்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னான்(60). இவர் வியாழக்கிழமை இரவு வீட்டின் முன் கட்டிவைத்திருந்த ஆடுகளை காரில் வந்த மர்ம கும்பல் கடத்த முயன்றது. சின்னான் சத்தம் போட்டதால் கிராமமக்கள் காரை மடக்கி இருவரை பிடித்து பாலவிடுதி போலீஸில் ஒப்படைத்தனர். 
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் மணிகண்டன் (25), கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஓந்தாகவுண்டனூரைச் சேர்ந்த பழனிசாமி (35) என தெரியவந்தது. 
இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸார் மேலும் விசாரிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT