கரூரில் தீயில் கருகி மூதாட்டி இறந்தார்.
கரூர் வெடிக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி சின்னம்மாள் (60). இவர் வியாழக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மண்ணெண்ணெய் விளக்கு சரிந்து அவரது சேலையில் தீப்பற்றியது.
இதில் படுகாயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.