காஷ்மீரில் வியாழக்கிழமை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு கரூர் பரணி பார்க் கல்வி குழும ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வெள்ளிக்கிழமை வீர வணக்கம் செலுத்தினர்.
பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வீரர்கள் படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் எல்லையில் தாய்த் திருநாட்டை காவல் காக்கும் காவல் தெய்வங்களாகிய நம் போர் வீரர்களுக்கு நாட்டின் உள்ள அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று சபதம் ஏற்றனர்.