கரூர்
நிலத் தகராறில் மூவருக்கு வெட்டு: 3 பேர் கைது
குளித்தலை அருகே நிலத்தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக உறவினர்கள் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
குளித்தலை அருகே நிலத்தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக உறவினர்கள் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த இரும்பூதிப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து (42). இவருக்கும் குளித்தலை மேலமைலாடியைச் சேர்ந்த ரவிக்கும் நிலம் தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ரவி அவரது மகன் பூமிநாதன்(18, உறவினர் திருச்சி உய்யக்கொண்டான் திருமலையைச் சேர்ந்த செல்வேந்திரன்(34) ஆகியோரும், பிச்சைமுத்து, நேரு(36), ராணி(38) ஆகியோரும் மோதிக் கொண்டனர். இதில் ரவி, பூமிநாதன், செல்வேந்திரன் ஆகியோர் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்து குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து பிச்சைமுத்து, நேரு, ராணி ஆகியோரைக் கைது செய்தனர்.