குளித்தலை அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் இறந்தார். கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மருதூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (35). இவர் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை முசிறியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கடம்பர்கோயில் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.