பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

குளித்தலை அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் இறந்தார். கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மருதூர்

குளித்தலை அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் இறந்தார். கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மருதூர் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (35). இவர் அதே பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை முசிறியில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கடம்பர்கோயில் அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி விழுந்து படுகாயமடைந்தார். குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  அவர் சிகிச்சை பலனின்றி  இறந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com