கரூர்
திருப்பாவை பாடல் பயிற்சி: 300 மாணவர்களுக்குப் பரிசு
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில்
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் திருப்பாவை பாடல் பயிற்சியில் பங்கேற்ற 300 மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற நிறைவு விழாவுக்கு, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரும், கோயில் செயல் அலுவலருமான சுரேஷ் தலைமை வகித்துப் பேசினார்.
புலவர் பார்த்தசாரதி மார்கழி மாதத்தின் சிறப்புகள் குறித்து பேசினார்.
திருப்பாவை பாடல் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் 300, பயிற்சியளித்த ஆசிரியர்கள் ராஜராஜேஸ்வரி, கோகிலா, லோகாம்பாள், சரஸ்வதி ஆகியோருக்கும் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழா ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.