இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியிடத்திற்கு கரூர் மாவட்ட இளைஞர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படையின் ஏர்மேன் பணி காலியிடத்திற்கான தேர்வு மார்ச் 14 முதல்17-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு www.airmenselection.cdac.in மற்றும் www.careerindianairforce.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி : பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி (கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவு) குறைந்தபட்ச 50 சதவீத மதிப்பெண் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனத்திலிருந்து குறைந்தபட்ச 50 சதவீத மதிப்பெண் உடன் கூடிய மூன்று வருட பொறியியல் பிரிவில் பட்டயப்படிப்பு மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவில் குறைந்தபட்ச 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். வயது 16 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். (19.01.1999 முதல்1.01.2003 ஆண்டுக்குள் பிறந்தவர்கள்). வரும் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.