அனுமதியின்றி மது விற்றவர் கைது

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பெட்டிக்கடையில் மது விற்றவரைப் போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே பெட்டிக்கடையில் மது விற்றவரைப் போலீஸார் கைது செய்தனர்.
தோகைமலை அருகே ஆர்.டி. மலை ஊராட்சி நாவல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (35). இவர் காவல்காரன்பட்டியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நாகராஜ் தனது பெட்டிக்கடையில் அரசு மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தோகைமலை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தபோது, அரசு அனுமதியின்றி மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மது பானங்களைப் பறிமுதல் செய்த போலீஸார் நாகராஜையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com