பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூரில், பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.


பெரம்பலூரில், பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூர் அசோக் நகரைச் சேர்ந்தவர் செல்லசாமி மகன் பரத்குமார் (16). இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. சிறப்பு வகுப்புக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிச் சென்ற பரத்குமார் வகுப்புக்கு செல்லவில்லையாம். இந்நிலையில், அவரது பெற்றோர் விவசாய வேலைக்கு சென்றுவிட்டனர். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு திரும்பிய செல்லசாமி மற்றும் அவரது மனைவி ஆகியோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, படுக்கை அறையில் பரத்குமார் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறிது செல்லசாமி அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com