ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் வட்டச் செயலர் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கே. ஆளவந்தார் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். 
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மத்திய அரசைப்போல, அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ. 1.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் துணைத் தலைவர்கள் எஸ். மகேஸ்வரன், பி. நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வட்ட இணைச் செயலர் கண்ணன் வரவேற்றார். வட்டப் பொருளாளர் பி. செல்வராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com