பெரம்பலூர் மாவட்டத்தில் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து இறந்த 2 போலீஸார் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு காவல் நிலைய தலைமைக் காவலர் சக்திவேல் முருகையன் (45). கடந்த ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
இதேபோல, பெரம்பலூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த புஷ்பலதா (43) உடல் நலக்குறைவால் . கடந்த ஒரு மாதமாக பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவரும் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தார். பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவிலுள்ள அவரது இல்லத்தில் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
காவலர்களின் உடலுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 காவலர்கள் உயிரிழந்ததால் காவல்துறையினர் சோகத்தில் ஆழந்தனர்.