பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட பேரையூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 221 பயனாளிகளுக்கு ரூ. 1.49 கோடியிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபெற்ற முகாமில், வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், கால்நடைப் பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 221 பயனாளிகளுக்கு ரூ. 1,49,64,590 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தி. ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.