முத்திரை கொல்லர் பணி தேர்வு;நுழைவு சீட்டு பெற அழைப்பு

முத்திரை கொல்லர் பணி தேர்வுக்கு விண்ணப்பித்து நுழைவுச்சீட்டு பெறாதவர்கள் நவ. 29, 30-களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

முத்திரை கொல்லர் பணி தேர்வுக்கு விண்ணப்பித்து நுழைவுச்சீட்டு பெறாதவர்கள் நவ. 29, 30-களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜே.ஏ. முகம்மது யூசுப் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் துறையில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் மண்டலத்தில் காலியாக உள்ள முத்திரை கொல்லர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு டிச. 2-ல் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலம் எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு கிடைக்காதோர் பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தை நவ. 29, 30-களில் நேரில் அணுகி நுழைவுச்சீட்டு நகலை பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் அதன் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அரசு அலுவலரிடம் சான்று பெற்று வர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com