நூலக வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி மற்றும் பட்டிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நூலக அலுவலர் சி. அசோகன் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் அகவி, துணைத் தலைவர் அ. தமிழ்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புத்தக கண்கட்சியை, வேப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ப. தமிழ்ச்செல்வி தொடக்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து, வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரிதும் துணை புரிவது அறிவு மிகுதியே, பண்பு மிகுதியே எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், வாசகர் வட்ட உறுப்பினர்கள் தே. தேவன்பு, சி. அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட மைய நூலகர் சந்திரசேகரன் வரவேற்றார். மாவட்ட மைய நூலகர் பி. ஆறுமுகம் நன்றி கூறினார்.