மீலாதுநபியொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு புதன்கிழமை (நவ.21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகள், உரிமம் பெற்று செயல்படும் மது அருந்தும் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.