பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நவ. 23 காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில், வேளாண் சம்பந்தமான நீர்ப் பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
எனவே, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரமுகர்கள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.