பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மைப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் த. கஜபதி தலைமை வகித்து தூய்மைப் பணிகளை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் தூய்மை சேவை இயக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர், பள்ளி வளாகத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.
விழாவில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் அ. ரமேஷ், எஸ். பாலகிருஷ்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் வ. தனபாலன், பா.த. ஸ்டான்லி மற்றும் பயிற்சி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வி. முத்துமாரிசாமி வரவேற்றார். இளையோர் செஞ்சிலுவை சங்க இணை கன்வீனர் எம். ஜோதிவேல் நன்றி கூறினார்.