பெரம்பலூர்

அரசுப் பள்ளிக்கு கணினி வழங்கிய முன்னாள் மாணவர்கள்

DIN

பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் கணினி உள்ளிட்ட பொருள்களை புதன்கிழமை அன்பளிப்பாக வழங்கினர். 
ஆலத்தூர் வட்டம், சில்லக்குடி அரசு உயர் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, அரசுப் பள்ளி பேரியக்கக் குழு என்னும் பெயரில் அமைப்பு உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு மூலம் தாங்கள் பயின்ற பள்ளியின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புகளுக்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருகின்றனர்.  
இந்நிலையில், ரூ.25 ஆயிரம் மதிப்பில் கணினி, கணினி அச்சு இயந்திரம் ஆகியவற்றை அப்பள்ளி முன்னாள் மாணவர்கள் ராஜோக்கியம், செந்தில்குமார், விக்னேஸ்வரன், ஆறுமுகம் ஆகியோர் அன்பளிப்பாக தலைமை ஆசிரியர் முத்துகுமாரிடம் வழங்கினர்.  நிகழ்ச்சியின்போது, துணைத் தலைமை ஆசிரியை சங்கீதா, ஆசிரியர்கள் கீதா, சுகுணா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.                                                 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT