பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே கிணறு தோண்டும் பணிமுடிந்து மேலே ஏறும்போது கயிறு அறுந்து ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மற்றொருவர் பலத்த காயமடைந்தார். வேப்பந்தட்டை வட்டம், நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவருக்கு சொந்தமான வயலில், கிணறு வெட்டும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (55), ராஜேந்திரன் (48) ஆகியோர் வியாழக்கிழமை கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டனர். பணிமுடிந்ததும், மேற்கண்ட இருவரும் ஒரு கயிற்றில் கூடையை கட்டி அதன்மூலம் கிணற்றிலிருந்து மேலே ஏறினர். அப்போது, எதிர்பாராதவிதாக கயிறு அறுந்து கூடை கவிழ்ந்து இருவரும் கிணற்றில் விழுந்தனர். இதில், சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராஜேந்திரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.