இன்று வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.


பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 23) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையம் 1.01.2019 ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும், கடந்த 1 ஆம் தேதி முதல் வரும் 31 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகள், குன்னம் சட்டப்பேரவை தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே, இம்முகாம்களில் வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் ஆகிய பணிகளையும் மேற்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com