மத்திய, மாநில அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, மக்கள் நல போராட்டக்குழு சார்பில்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, மக்கள் நல போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, போராட்டக்குழு தலைவர் கி. முகுந்தன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக நிர்வாகி ந. அக்ரி ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வீ. ஞானசேகரன், மதிமுக மாவட்டச் செயலர் செ. துரைராஜ், வழக்குரைஞர்கள் ப. காமராஜ், இரா. ஸ்டாலின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், தந்தை பெரியார் சிலை மீது செருப்பு வீசி அவமதித்த நபர்களை குண்டர் சட்டத்தினன் கீழ் கைது செய்ய வேண்டும். உயர்நீதி மன்றத்தையும், காவல் துறையினரையும் கொச்சைப்படுத்தி, மதக் கலவரங்களை தூண்டிவரும் எச். ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.
இதில், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி. தங்கராஜ், தமுஎக சங்க மாவட்ட பொறுப்பாளர் பேராசிரியர் ப. செல்வக்குமார், மக்கள் உரிமை கூட்டியக்க நிர்வாகி சு. அசன் முஹமது, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க நிர்வாகி எம். கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழக பொறுப்பாளர் சித்தார்த்தன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com