ரூ. 2 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட பூமி பூஜை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மருதையாற்றில் ரூ. 2 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே மருதையாற்றில் ரூ. 2 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
ஆலத்தூர் ஒன்றியம், சா.குடிக்காடு - கொளக்காநத்தம் நெஞ்சாலையின் குறுக்கே மருதையாறு செல்கிறது. இந்த ஆற்றுப் பகுதியில் தரைப்பாலம் உள்ளதால், மழைக் காலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது போக்குவரத்து பாதிக்கப்படும். 
இதுபோன்ற காலங்களில், பல்வேறு கிராம பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மருதையாற்று பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இயைடுத்து, அந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கு அரசு ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 
அதன்படி, சா.குடிக்காடு - கொளக்காநத்தம் நெஞ்சாலையில் குறுக்கே கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி மதிப்பீட்டின் கீழ், மருதையாற்றில் மேம்பாலம் கட்டுதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி மற்றும் பணி தொடக்க விழா நடைபெற்றது. 
 குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் மா. சந்திரகாசி, பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பணிகள் தொடங்கியது.  இதில், அதிமுக ஒன்றிய செயலர் என்.கே. கர்ணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com