அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது கர்ப்பிணி சாவு

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ அறுவைச் சிகிச்சையின்போது கர்ப்பிணி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவ அறுவைச் சிகிச்சையின்போது கர்ப்பிணி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி மனைவி சுகுணா ரோஸ் (33). தம்பதிக்கு ஏற்கெனவே 4 பெண்கள் உள்ளனர். இந்நிலையில், 5-வது முறையாக கர்ப்பமடைந்த சுகுணா ரோஸ், பிரசவவலி ஏற்பட்டு அறுவைச் சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது  எதிர்பாராதவிதமாக சுகுணா ரோஸ் உயிரிழந்தார். 
  பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com