பெரம்பலூரில் கிடப்பில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் சு. சுகுமார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர்கள் கே. முத்துசாமி, ஆர். ராஜேந்திரன், டி. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் தலைவர் ந. சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சேலத்திலிருந்து நாமக்கல், துறையூர், பெரம்பலூர் வழியாக அரியலூர் ரயில் பாதையை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்துக்கு நீர்பாசன வசதி ஏற்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொறுப்பாளர்கள் முத்து, எஸ்.எம். அருள், ஏ.பி. சக்திவேல், ரா. பாரதி, த. அகிலா, கே. சதீஸ்குமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் ஆர். ராஜேந்திரன் வரவேற்றார்.