பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஃஎப் வீரர்களுக்கு பெரம்பலூர் வணிகர் சங்கத்தினர் திங்கள்கிழமை மெழுகுவர்த்தி ஏந்தி மௌனஅஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே,
மாவட்ட வணிகர் சங்கத்தினர் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அச்சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் உயிரிழந்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சங்கத்தின் துணைத் தலைவர் முகமது ரபீக், மாவட்டப் பொதுச் செயலர் நல்லதம்பி, இணைச் செயலர் சண்முகம் உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள், உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்கள் சார்பில்: பெரம்பலூர் முத்து நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.