சிறுவாச்சூர்  பகுதிகளில் பிப்ரவரி 20 மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுவாச்சூர் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.20) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உதவிச் செயற்பொறியாளர் ரா. அசோக்குமார் 
திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு;பெரம்பலூர் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணி முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com