பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் சமூகப் பணித்துறை மூன்றாமாண்டு மாணவர்கள் சார்பில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசியிரியர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். சமூகப்பணி துறைத் தலைவர் அருள்செல்வி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அருள்செல்வி, குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பின் அவசியம் என்னும் தலைப்பில் பேசினார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை, மாணவி நிஷாந்தி தொகுத்து வழங்கினார். மாணவர் ஏழுமலை வரவேற்றார். மாணவி மகாலட்சுமி நன்றி கூறினார்.