உலக தாய்மொழி நாள் விழா கொண்டாட்டம்

பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கரம் கொடு மனிதா அறக்கட்டளை சார்பில் குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. 
பள்ளி தலைமை ஆசிரியர் கஜபதி தலைமை வகித்தார். கரம் கொடு மனிதா அறக்கட்டளை நிர்வாகி ஜெயசீலன் முன்னிலை வகித்தார். 
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளந்தமிழர் இலக்கியப் பேரவையின் பேச்சாளர் கோட்டாத்தூர் ரவிக்குமார், தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து விளக்கினார். 
பின்னர், உலக தாய்மொழி நாளையொட்டி பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில், தொழிலாளர் மக்கள் நல அறக்கட்டளை மாணவர் திறன் பயிற்சியாளர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com