கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டக் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள 18 கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பிப். 25 முதல் 28 ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தி இனச்சுழற்சி முறையில் நிரப்பிட  விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. 
இந்நிலையில், நிர்வாக காரணத்தை கருத்தில்கொண்டு மேற்கண்ட நேர்காணல் குறித்த அனைத்துப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, நேர்காணல், பணி நியமனம் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com