ஜெருசலேம் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்ல தமிழக அரசின் நிதியுதவி

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் செல்ல தமிழக அரசின் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் இந்தப் பயணம் மேற்கொள்ள தமிழக அரசால் தலா ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம்  நிதியுதவி வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றை ‌w‌w‌w.​b​c‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  எனும் இணையதள முகவரியில் தெரிந்துகொள்வதோடு, விண்ணப்பத்தை பதிவிறக்கிக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனித பயணத்துக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005 என்னும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com