பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் 576 பெண்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 34 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அண்மையில் பெறப்பட்டன. இதில், மாவட்டம் முழுவதும் 576 பெண்கள் விண்ணப்பித்தனர்.
இந்த விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பும் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நேர்முகத் தேர்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது. இதில், 576 பெண்கள் பங்கேற்றனர். சமூக நலத்துறை அலுவலர் (பொ) ச. பூங்கொடி தலைமையிலான அலுவலர்கள் நேர்முகத் தேர்வை நடத்தினர்.