பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 2018-2019 ஆம் ஆண்டுக்கு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் ஜன. 29 முதல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. ராமசுப்ரமணியராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தடகளப் போட்டிகள், நீச்சல், கூடைப்பந்து, கையுந்து பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கைப்பந்து, பூப்பந்து மற்றும் மேசைப்பந்து (இருபாலருக்கும்) ஆகிய போட்டிகள் ஜன. 29 முதல் 31 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.
ஆண்களுக்கு 100 மீ.,, 800 மீ., 5,000 மீ., 110 மீ., தடகளம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும், பெண்களுக்கு 100 மீ., 400 மீ., 3,000 மீ., 100 மீ., தடகளம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீச்சல் போட்டிகளும், மேசை பந்து 2 ஒற்றையர்கள் மற்றும் ஒரு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03516 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.